Thursday, February 28, 2008

எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி

தலைசிறந்த எழுத்தாளரும், விஞ்ஞானியுமான சுஜாதா நேற்று காலமானார்.அவருக்கு வயது 72.
என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர். பலருக்கு கற்றதும் பெற்றதும் வழங்கிய அவர் வாழ்க்கையில் எதையும் ஒரு முறை சாதிக்க வேண்டும் என்ற மனம் படைத்தவர். தனது முதிர்ந்த வயதிலும் இளமை குறையாது எழுதிய அவருக்கு இறைவனின் அழைப்பு இவ்வளவு விரைவில் இருக்கும் என எண்ணவில்லை. தனக்கு பை பாஸ் சர்ஜரி நடந்ததைக் கூட மிக நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர் . அவரின் மறைவு தமிழ் எழுத்துலகுக்கும், திரையுலகத்திற்கும், நாடக உலகத்திற்கும், மிகப் பெரிய இழப்பு ஆகும். அவரின் ஆன்மா அவரின் ஆத்மார்த்தமான ஸ்ரீ ரங்கநாதரின் திருவடிகளை அடைந்து, நிம்மதி அடைய பிரார்த்திக்கிறேன். அவருடைய குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

"Nobody dies; they live in memories and in the genes of their children"

No comments: