Monday, July 02, 2007

திருப்பாவை பாசுரம்

திருப்பாவை பாசுரம் ஒன்று சிவாஜி படத்தில் இடம் பெற்றிருக்கிறது. ஷ்ரேயா introduction பாடலில் கோமதிஸ்ரீ பாடிய மனதை வருடும் பாடல் அது.

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்


விளக்கம்
திருமாலே! மணிவண்ணா! மார்கழி நீராட்டத்திற்கு
பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில்
உலகம் நடுங்க ஒலிக்கும் பால் நிறப் பாஞ்சசன்னியம்
போன்ற சங்குகளும், மிகப் பெரிய பறைகளும்,
பல்லாண்டு பாடுபவர்களும், அழகிய விளக்குகளும்,
கொடிகளும், அவற்றிற்கு மேல் கட்டவேண்டிய
சீலைகளும் வேண்டும். ஆலிலைமேல் பள்ளி கொண்டவனே,
இவையனைத்தும் எங்களுக்குத் தந்தருள வேண்டும்.

திருப்பாவை பாசுரம் ஒவ்வொன்றும் "ஏலோரெம்பாவாய்" என்று முடிவதைக் காணலாம். பாவையை அல்லது பாவை நோன்பிற் காலந்து கொள்ளும் பெண்களை விளித்துக்கூறும் வண்ணம் அமைந்த வாய்பாடு போலவே இதனைக் கருதவேண்டும். சிலர் இதனை 'ஏல் ஓர் எம்பாவாய்' எனப் பிரித்துப்
பொருள் கூற முயல்வர். இவ்வாறு பொருள் கூறுவது எல்லாவிடத்திலும் பொருந்திவராது. ஆதலால் அடிநிறைக்கவந்த சொற்றொடராகவே இதனைக் கொள்ளுதல் தகுதி என்று கூறுவர். திருப்பாவையில் 'ஏலோரெம்பாவாய்" என்னும் சொல்லுக்கு முன்னரே பாட்டின் பொருள் முடிவு பெற்றுவிடுவது கருத்திற் கொள்ளவேண்டும். சான்றாக "பாரோர் புகழப் படிந்து" "உய்யுமா றெண்ணி உகந்து" "நீங்காத செல்வம் நிறைந்து" எனப் பாசுர முடிவுகள் (திருப்பாவை 1 - 3) பொருள் முற்றுபெற்று நிற்பதைக் காணலாம். "உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்" (திருப்பாவை - 17) போன்ற பாசுர முடிவுகள் இதற்கு விலக்காக அமையும். எனவே பாவை பாடலுக்கு ஏற்ற மகுடமாகவும், அதே சமயம் அடிநிறைக்க வந்த சொற்றொடராகவும் இதனைக் கொள்வதுவே பொருத்தமாகும். பிற்காலத்தில் வந்த பாவை நூல்களும் "ஏலோரெம்பாவாய்" என்றே முடிவு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது

1 comment:

யோசிப்பவர் said...

விளக்கம் சரியாயில்லை!!!;(