Friday, June 22, 2007

மேலும் சில மணவாழ்வு விதிகள்

1. இருவரும் ஒரெ சமயத்தில் கோபப்ப்டாதீர்கள்.
2. வீடு பற்றிக்கொண்டால் தவிர கூச்சல் போடாதீர்கள்.
3. வாக்குவாதத்தில் இருவரில் யாராவது வெற்றி பெற்றே ஆகவேண்டுமென்றால், அது மற்றவராக இருக்கட்டும்.
4. அன்போடு விமரிசிக்கவும்.
5. கடந்த காலத் தப்புக்களை சொல்லிக் காட்டாதீர்கள்.
6. உலகத்தை நிராகரித்தாலும் ஒருவரை ஒருவர் நிராகரிக்காதீர்கள்.
7. தூங்கப்போகுமுன் சண்டை போட்டு முடித்துவிடுவது உத்தமம், மெகா சீரியல் ரேஞ்ச்சுக்கு இழுக்க வேண்டாம்.
8. தினம் ஒரு முறை பரஸ்பரம் பாராட்டுங்கள்.
9. தப்புச் செய்துவிட்டால், உடனே ஒப்புக் கொள்ளவும், மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருங்கள்.
10. சண்டைக்கு இரண்டு பேர் தேவை. இருவரில் அதிகம் பேசுபவர் பேரில்தான் தப்பு இருக்கும்.


மேலும் உங்களுக்கு எதாவது புதிய விதிகள் தெரிந்தால் உடன் மின்அஞ்சல் அனுப்பவும்.

1 comment:

நிலாரசிகன் said...

புரியுது சார்.

நல்லா இருந்தா சந்தோசம் தானுங்க.