Wednesday, June 20, 2007

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு பத்து விதிகள்

1. கணவனோ மனைவியோ மற்றவரின் நண்பர்களையோ உறவினர்களையோ கிண்டல் செய்யாமலிருப்பது.
2. கணவன் மனைவியின் உறவினர்கள் பெயர்களைக் கூடிய மட்டும் தெரிந்து வைத்துக் கொள்வது.
3. கணவன் மனைவியை மற்றவர் முன்னால் கிண்டல் செய்யாமல் இருப்பது.
4. எப்பவும் ஆண்களே இப்படிதான் என்று மனைவியும், பெண்களே இப்படிதான் என்று கணவனும் பொதுப்படுத்தாமல் இருப்பது.
5. கணவன் எதையாவது முக்கியமானதைப் படித்துக் காட்டும்போது மனைவி பராக்கு பார்ப்பதோ, அடிக்கடி மணி பார்ப்பதோ, நடுநடுவே கொசு அடிப்பதையோ தவிர்ப்பது.
6. வீட்டில் நெருப்புப் பெட்டி, காபிப் பொடி, பனியன் போன்ற சில அத்தியாவசியப் பொருள்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று கணவன் தெரிந்து கொள்வது.
7. மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கணவன் கவனமின்றி தலையாட்டி விட்டு பிறகு மாட்டிக்கொள்ளாமல் இருப்பது.
8. கணவன் மனைவியை கண்ணே, கன்னுக்குட்டி, குட்டிநாயி, என்றும் 'டா' போட்டும் கூப்பிடுவதை முதல் வருஷத்துடன் நிறுத்தி விட்டால் அவன் சுயநிலைக்கு வந்து விட்டான் என்று மனைவி புரிந்து கொள்வது.
9. கணவன் இளவயசுகாரர்களுடன் கிரிக்கெட், ஓட்டப்ப்ந்தயம், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள் மனைவி முன்னால் ஆடாமல் இருப்பது.
10. கணவன் மனைவியின் 'டிரஸ்ஸிங் டேபிள்' என்னும் புனிதப் பிரதேசத்தின் பக்கமே போகாமல் இருப்பது.

1 comment:

Unknown said...

daei.. Written in Experience or the complaints in u;r life ah...

eh he heee... cheers...
Stephen s